''அர்த்த ஜாமத்தில்!" அர்த்தமற்று நான் கண்ட கனவு!!!

 



''அர்த்த ஜாமத்தில்!"  அர்த்தமற்று நான் கண்ட கனவு!!!


✍   ஆள் நடமாட்டமில்லா நடு இரவு தான் 

         அது.

  எங்கோ என் பணி முடித்துவிட்டு 

  சற்று பயண களைப்பில் 

  நேரம் மறந்து .

  மணி கணக்கில் கைப்பேசியில் கலந்து 

விட்டேன்..!


✍   பின் தான் தெரிந்தது..

        நேரம் கடந்து.

    கால்கள் இல்லா காட்டேரிகள் நடக்கும் 

நேரமென்று .


✍   என்ன செய்ய நான்   ..

புத்தி பேதளிக்க.

மனம் குளறுபடியாக.

கால்கள் தள்ளாட 

கைகள் பதற..

கண்கள் இருட்டி கொண்டது போல் 

ஓர் உணர்வு.


✍   இருந்தும் மனம் திடம் கொண்டு 

என் பயணத்தை.

என் bike க்குடன் தொடர்ந்தேன்.

நான் ஒருவளாய்.


✍  எப்போதும் விட சற்று வேகத்தை கூட்டி 

ஓட்டினேன்.

இருந்தும் யாரோ ஒருவரின்...

குரல்...

என் bike சத்ததையும்மீறி 

காதுக்குள் வீறிட்டு பாய்ந்தது.


✍  பயம் தான்....

ஆனால்  என் பயம் எனையே சற்று 

யோசிக்க விடாமல் கொன்று விடுமே....!?


✍   எதையும் யோசிக்காது  ...

இன்னும் வேகம் எடுத்தேன்.


✍  எதிரே.....!  ஓர் பெரிய உருவம் 

மண்ணுக்கு  மேல்.

வானம் முட்டும் உயரம்.


✍   கால்கள் நீண்டு.

கைகள் தரை தொட.

பற்கள் பளிச்சிட.

தலைக்கும்,காலுக்கும் நீண்டதாய் 

கோரம் கொண்ட முடிகள்..


✍   எனை நிறுத்த......!

எனை சற்று மூச்சை நிறுத்தும் சக்தி 

அதனிடம் இருந்தது.


✍  அதையும்  மீறி  ....

இன்னும் வேகத்துடன்   

அதன் வயிற்றை கிழித்து கொண்டு..


✍   குடலும் ,குருதியும்  பிய்த்து கொண்டு.

என் உடல் முழுதும் 

இதே தோரணையில் .

அதனை  கடக்க.


✍   அதுவும் விடாது எனை துரத்த ...

துரத்திய அதுவும்.

எனை விட்ட பாடில்லை.

துரத்த,துரத்த.

தூரம் ஓடும்,என் ஓட்டமும் நின்ற பாடில்லை..


✍   பின் மூச்சு பிடிக்க .

ஓட்டி வந்த என் bike நிறுத்தி விட்டு.

தைரியமாக.

பின் திரும்பி பார்த்தேன்..


✍  அப்போது தான் புரிந்தது ...

      "அர்த்த ஜாமத்தில்!"

அர்த்தமற்று நான் கண்ட கனவு என்று...!!!



0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post