தமிழ் கவிதைகள்
🔵உன்னை பிரிந்த அந்த
ஒரு கணத்தில்
நான் இறந்துவிட்டேன்...
இப்பொழுதும்
நடை பிணமாகத்தான்
வாழ்ந்து கொண்டு
இருக்கிறேன் உன் நினைவில் ....!!!
🔵நீ கேட்டதும்
கொடுத்து விடலாம் என்றே,
இன்னும்,
என்னிடமே வைத்திருக்கிறேன் …
என் மனதை ....!!!
🔵நானும் என்
இதயத்தை இரும்பாக
தான் வைத்திருந்தேன்!
யாருக்கு தெரியும்!!
அவள் காந்தமாக
இருப்பாள் என்று!!!
🔵பார்வையில் உணர்த்தியும்,
பக்கம் பக்கமாய் எழுதியும்
தீராத பல காதல்...
பெற்றவர்கள் கண்ணீரில்,
உற்றவனை/வளை
மறந்து கேட்பாரற்று கரைகிறது... !!!
🔵என் உயிரே... என் அருகில் வா,
நாம் தொலை தூரம் செல்வோம்.
🔵என் அன்பே!!!
"புல்லாங்குழலாகும்
வரை காத்திருக்கும்
மூங்கில் போல், உன்
காதலனாகும் வரை
காத்திருப்பேன்
உனக்காக!!!!
🔵எனக்கு தெரிந்த
இரண்டு ஸ்வரங்கள்
என் இனியவளின்
கை வளயோசையும்
கால் கொலுசு ச்சத்தமும்!!!
🔵உன் ஆள்காட்டி விரல்,
அழகு காட்டி
விரலாகி விடுகிறது...
என்னை நீ காட்டும் பொது!!!
🔵மாற்றம் பெண்களுக்காக உருவானது...!!!
ஏமாற்றம் ஆண்களுக்காக
உருவானது...!!!
🔵காதலித்த அனைவரும் கை பிடிப்பதில்லை ;
கை பிடித்த அனைவரும் காதலிப்பதில்லை!!!
🔵பூச்சூடிவிடு என்று சொல்லி
பின்புறமாகத்
திரும்பி நிற்கிறாயே!!!
🔵நான் பூச்சூடும்போது
உன் முகம் மலர்வதை
நான் எப்படிப் பார்ப்பது!!!
🔵உன்னைப் பார்த்து சிலிர்த்த சந்திரனும்,
சிறிது சிறிதாக மறைகிறான்...
தேய்பிறை!!!
🔵என்னை விட சிறந்தது
உனக்கு கிடைத்து விட்டால்,
அதைவிட மகிழ்ச்சி
எனக்கு வேறெதுவும்
இருக்க முடியாது!!!
🔵தோழமைக்கும், காதலுக்கும்
நூல் அளவே இடைவெளி…
அது அறுந்தால்
மனவலி!!!
🔵கண்ணை இமைக்கும்
நேரத்தை விட ,
உன்னை நினைக்கும்
நேரம் தான் அதிகம்!!!
🔵நான் என் காதலை
அவளிடம் சொல்ல
மறந்தேன் .
காரணம் அவளை
பார்த்த அந்த
நொடி நான்
என்னையே மறந்துவிட்டேன்!!!
🔵யாரிடமும் சொல்லாத
உண்மையை உன்னிடம்
சொன்னேன், நீயோ அதை பொய்யாக்கிவிட்டாய்!!!!
🔵உன்னைத்
தேடித்தேடி
கண்டுபிடித்தேன்
என்னைத் தொலைப்பதற்கு!!!
🔵எத்தனயோ மொழி
பேச தெரிந்த எனக்கு,
உன்னிடம் பேச நினைத்து
அருகில் வரும் போது
வரும் மொழி, இது
மட்டும்தான் அன்பே ...
மௌனம்!!!
🔵காதலியோடு வாழ்வதற்கு
தான் கடவுளிடம்
கேட்க வேண்டும் !
காதலுடன் வாழ்வதற்கு ?
யாருடைய அனுமதியும்
தேவை இல்லை !
என் உலகில்,
நானும் என் காதல் மட்டுமே!!!
நன்றி

Post a Comment