தமிழ் கவிதைகள்:
♥️சிறப்பான
விடைகளை விட
சிந்திக்க வைக்கும்
வினாக்களே
அறிவை வளர்க்கும்!!!
♥️என் ஒவ்வொரு
நொடியிலும்
மறைந்திருக்கும்
சுவாரஸ்யம்
நீ அன்பே!!!
♥️நடக்குறது எல்லாமே
நல்லதுக்கு தான்
நடிக்கிற எதையுமே
கண்டுக்காத வரைக்கும்!!!
♥️அப்படியென்ன மாயமோ
புரியவில்லை
நிஜம்கடந்த
நினைவுலகில் மட்டுமே
வாழ்கிறது
நம் சந்தோச
தருணங்கள் அனைத்தும்!!!
♥️உண்மையாக இரு
உனக்கு உண்மையாக
இருப்பவர்களுக்கு மட்டும்!!!
♥️காற்றாய்
தீண்டி காணாமல்
போகின்றாய்
மனதில் ஆசையெனும்
புயலை தூண்டி!!!
♥️நம்மை நாமே
தேடுவது
வாழ்க்கை அல்ல
நம்மை நாமே
உருவாக்கிக் கொள்வது
தான் வாழ்க்கை!!!
♥️எப்பொழுது வருவாய்
என்ற கேள்வியிலேயே
தொங்கி நிற்கிறது
சீக்கிரம் வந்துவிடு
என்ற எதிர்பார்ப்பு!!!
♥️வருத்தம் இங்கே
இரண்டே விதம் தான
நினைத்தது நடக்கவில்லை
என்று சிலர்
நடந்ததை நினைத்து
வருந்திக் கொண்டு சிலர்!!!
♥️உண்ணாத நாட்களுமுண்டு
உறங்காத நாழிகையும்
உண்டு
உனை எண்ணாத
நாட்களென்று
எதுவுமில்லை என்னுயிரே!!!
♥️தேய்ந்து வளரும்
நிலவாய்
நம் காதல்
ஊடலுக்கு
பின் பௌர்ணமியாக!!!
♥️எத்தனை வருடங்கள்
கடந்து திரும்பிப் பார்த்தாலும்
நானா இது என்று மட்டுமே
அதிசயப்பட வைப்பதே
வாழ்க்கையின் சிறப்பு!!!
♥️நீ சென்று
கொண்டே இருக்கிறாய்
உன் நினைவு
வந்து கொண்டே இருக்கு!!!
♥️பேருந்தில்
இருக்கைகாக
ஓடுவது போல
வாழ்க்கை எனும்
பயணத்தில்
காதல் என்ற
இருக்கைக்காக
பலர் ஓடுகின்றனர்!!!
♥️நாணாலின்
தீண்டலிலும்
உன் ஞாபகங்கள்
பேரிம்சையாய்
தீண்டுதே மனதை!!!
♥️கடைசி வரை
உடனிருப்பேன்
என்பதெல்லாம்
போலி வார்த்தைகள் தான்
இங்கு கருவறை முதல்
கல்லறை வரை யாவும்
தனியே என்பதே நிதர்சனம்!!!
♥️எதையும் கண்டு
கொள்ளாத மனம் தான்
உனை கண்டு விட்டால்
எனை கண்களிலேனும்!!!
கடத்திவிட மாட்டாயா
என்றே எண்ணுகிறது
♥️எவ்வளவு
நிறைவு இருந்தாலும்
ஏதோ ஒரு குறை
இருக்கத்தான் செய்கிறது
எல்லோரது வாழ்க்கையிலும்!!!
♥️தேடியது கிடைக்கும்
போது தான்
தேடல் கூட இன்னும்
அழகாகிறது!!!
♥️ஒருவரின் சின்ன சின்ன
மாற்றங்கள் மனக்கசப்பை
தந்தாலும் அவர்களை
புரிந்து கொள்ள
ஒரு வாய்பினை தந்துவிடுகிறது!!!
நன்றி

Post a Comment