வாழ்க்கை தத்துவ கவிதைகள்

 


தமிழ் கவிதைகள்



🔘"ஏட்டில் பலவரி கவிதை

கிறுக்கினாலும்

எப்போதும்

பிடிக்கும் நெற்றியேட்டில்

என்னவன் கிறுக்கும்

இருவரி கவிதை!!!


🔘"நாம் காத்திருப்பது

தெரிந்தும்

அடுத்தவர்களுக்கு

முக்கியத்துவம்

கொடுப்பதெல்லாம்

அவர்களுக்கே

உள்ள அலட்சிய குணம்!!!


🔘"உன் விழியில்

கற்று கொண்டதை

என் விழியால்

கடத்துகிறேன்

மீட்டு கொள்

விழிகளால் மீண்டும்

நான் கற்று கொள்ள

உன் விழி கவிதைகளை!!!


🔘"நேரம் செல்ல செல்ல

நாட்கள் நகர நகர

வருடம் கடக்க கடக்க

வருந்தும் நினைவுகள்

யாவும் மறைந்து போகும்

மகிழ்வித்த தருணங்கள்

யாவும் ஏங்கும் சுவடுகளாகும்!!!


🔘"நீரில் மாட்டி

கொண்ட இலையாய்

சிக்கி தவிக்கிறேன்

உன் காதலெனும் நதியில்

தத்தளித்த போதும் சுகமாய்!!!


🔘"விடை தெரிந்த

கேள்விகளுடன்

துணிவதல்ல வாழ்க்கை

விடை தெரியாத

கேள்விகளுக்கும்

விடை சொல்ல

துணிவதே வாழ்க்கை!!!


🔘"தீண்டி சென்றாய்

மென்னிதழால்

கன்னத்தை

தீரவில்லை போதை

இன்னும் எண்ணத்தில்!!!


🔘"நம்ம வாழ்க்கைல

நமக்காக சின்ன சின்ன

சந்தோஷம் கொடுக்கிற உறவை

சில அற்ப விடயத்திற்காக

விட்டு கொடுக்காமல் 

இருப்பது நம் வரம்

புரிதல் கொண்ட நட்பில்

பிரிவுக்கு இடமே இல்லை!!!


🔘"நீ காவலா காதலா

அறியாத போதும்

அழகாய் தொடர்கிறது

பயணம்

முடிவில்லா

மன பாதையில்!!!


🔘"புரியாதவர்களுக்கு

புரிய வைக்க

நினைப்பதை விட

புரியாத விஷயம்

புரியாதவர்களுக்கு

புரியாமல் இருப்பதே மேல்!!!


🔘"கடல் போல

பெரிய சந்தோஷங்கள்

தேவையில்லை

கால் நனைக்கும்

அலை போல 

சின்ன சின்ன

சந்தோஷங்கள்  போதும்!!!


🔘"பிறரை காயப்படுத்தாத

புன்னகையும்

தன் காயத்தை மறைக்கும்

புன்னகையும்

என்றுமே பேரழகு!!!


🔘"இந்த வாழ்க்கை

அழகாய் மாறுகிறது

நாம் யாரிடமாவது

அன்பு காட்டும் பொழுதும்

நம்மிடம் யாராவது

அன்பு காட்டும் பொழுதும்!!!


🔘"வாழ்க்கையில்

நமக்கான

அடையாளத்தை

நாம் உருவாக்கியதாக

இருக்க வேண்டும்

பிறர் கொடுத்ததாக

இருக்க கூடாது!!!


🔘"வாழ்க்கை

முடியும் வரையிலும்

ஒரு புதிராகவே இருக்கிறது

புதிரைக் களைவதே

வாழ்வின் சுவாரஸ்யமாகி விட்டது!!!


நன்றி



0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post